தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். வில்லன், ஹீரோ என்று இரண்டு விதமான கேரக்டர்களில் நடித்து வரும் அவர் தற்போது ‘அட்டு’ கூட்டணியுடன் சேர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ‘அட்டு’ திரைப்படம் பரவலான கவனம் பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா, தற்போது ஆர்.கே.சுரேஷை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘டைசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
’பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத ஒரு வேடத்தை ‘டைசன்’ படத்தில் ஏற்றிருக்கிறாராம். மேலும் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய், இப்படத்தில் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ‘டைசன்’ படத்தை அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...