நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜா, சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் வைத்து பல படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக உருவெடுத்தார். ஆனால், அவர் ஏற்படுத்திய கடன் சுமையால் தவித்த சூர்யா குடும்பத்தார், தற்போது ஞானவேல்ராஜாவை கழட்டிவிட்டு விட்டனர்.
இதனால், புது கூட்டணி அமைத்து ஆபாச படங்களை தயாரித்து லாபம் சம்பாதித்து வரும் ஞானவேல்ராஜா ஒரு பக்கம் ஏகப்பட்ட கடன் வாங்கியிருப்பதாக கூறினாலும், தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
அப்படி அவர் தயாரிக்கும் ஒரு படம் தான் ‘நோட்டா’. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவே தற்போது ஞானவேலுக்கு பிரச்சினையாகியுள்ளது.
திரையரங்கங்கள் மற்றும் கியூப் நிறுவனத்திற்கு எதிராப ஸ்டிரைக் அறிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், ஆடியோ நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஞானவேல் இந்த உத்தரவை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...