Latest News :

பாலாவுக்கு நோ சொன்ன கெளதமி!
Monday March-12 2018

கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில், இ4 எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் அதில் வெற்றி பெற்றது.

 

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்ற தலைப்பில் பாலா இயக்க, இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் துருவுக்கு ஜோடி தேடும் பணியிலும் பாலா ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், துருவுக்கு ஜோடியாக நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியை நடிக்க வைக்க ‘வர்மா’ முடிவு செய்த பாலா, இது குறித்து கெளதமியிடம் பேசியுள்ளார். தனது மகளை ஹீரோயினாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள கெளதமி, பாலாவின் அழைப்பு ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, தனது சினிமா நண்பர்களிடம் விசாரித்தாராம். பாலாவின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அவர் படத்தின் ஹீரோக்கள் தான் மக்களிடம் பிரபலமடைவதோடு, முன்னணி ஹீரோக்களாகும் உருவெடுப்பார்கள். அவர் படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் இதுவரை பிரபலமானதில்லை, என்று அட்வைஸ் செய்தார்கள்.

 

இந்த அட்வைஸை கேட்டு சற்று யோசித்த கெளதமி, பாலாவுக்கு நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது அதிகாரப்பூர்வமான் தகவல் இல்லை என்றாலும், இந்த விவகாரம் குறித்து கெளதமியோ அல்லது ‘வர்மா’ படக்குழுவோ வாய் திறந்தால் தான் உண்மை தெரியும்.

Related News

2168

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery