1983 ஆம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தவர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது முதல் கணவரான நடிகர் மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்த ஊர்வசி, சென்னையை சேர்ந்த தொழிலதிபதி ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட பிறகு சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்தவர், குழந்தை பிறந்ததற்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு ஜூனியர் நடிகரான திலீப்புக்கு ஜோடியாக மலையாளப் படம் ஒன்றில் ஊர்வசி நடிக்கிறார்.

நடிகை ஊர்வசிக்கும், நடிகர் திலிப்புக்கும் ஒரே ஒரு வயதுதான் வித்தியாசம். ஊர்வசியை விட திலீப் ஒரு வருடம் மூத்தவர். இருந்தாலும் கூட, நடிகை ஊர்வசி, நடிகர் திலீப்பை விட சீனியர் நடிகை. இதுவரை மலையாளப் படங்களில் இருவரும் ஜோடியாக நடித்ததில்லை. தற்போது முதன்முறையாக திலீப்புடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் ஊர்வசி.
மலையாள இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா அடுத்தததாக திலீப்பை வைத்து இயக்கவுள்ள, ‘கேசு ஈ வீட்டிண்டே நாதன்’ என்கிற படத்தில் ஊர்வசி, திலீப்புக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...