மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு 9 மணிக்கு மேல் நகரத்தின் முக்கிய சாலைகள் மட்டும் இன்றி, சிறு சிறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி, நேற்று இரவு சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர். அந்த காரை பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பி.எல்.தேனப்பன் ஓட்டி வந்தார். அப்போது அவரை போலீசார் பரிசோதித்த போது அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த போலீசார், பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடிகர் ஜெய் மது போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய நிலையில், தற்போது தயாரிப்பாளர் மது போதையில் கார் ஓட்டி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...