தமிழ் சினிமா மட்டும் இன்றி பாலிவுட், மலையாள சினிமா, தெலுங்கு சினிமா என்று அனைத்து இடங்களிலும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக பல நடிகைகள் பேட்டிகளில் கூறி வேதனைப்பட்டு வருகிறார்கள்.
கதாபாத்திர வேடங்களில் நடித்த சில நடிகைகள் இதுபோன்ற விஷயங்களை ஓபனாக பேசினாலும், முன்னணி நடிகையாக இருப்பவர்கள் இது குறித்து எதுவும் பேசியதில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், நடிகை சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி பிரபல டிவி சேனலின் உயர் அதிகாரி ஒருவர், தனக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டார், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வரலட்சுமிக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி பலர் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் அவரது அப்பா சரத்குமார், சினிமாவில் மட்டும் இன்றி அரசியலிலும் முக்கிய இடம் வகிக்கிறார். அவரது மகளுக்கே இந்த நிலையா, என்பது தான். அந்த சமயத்தில் இந்த விஷயம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வரலட்சுமி மீண்டும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அது தான் நடிகைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
வெல்வெட் நகரம், விஷாலுடன் ஒரு படம், விஜயுன் ஒரு படம் என்று தற்போது கை நிறைய படங்களை வரலட்சுமி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...