தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 40 புதுப்படங்கள் வெளியாகமல் முடங்கி போயுள்ளது. இதனால், சுமார் 40 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், சென்னையில் உள்ள திரையரங்கங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருவதோடு, பழைய படங்களை ரிலீஸ் செய்து நல்ல முறையில் கல்லா கட்டியும் வருகிறார்களாம்.
அந்த வரிசையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘6 அத்தியாயம்’ என்ற படமும் தற்போது நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆறு குறும்படங்களை ஒன்றாக தொகுத்து, ஒரு திரைப்படமாக உருவாக்கிய இப்படத்தின் முயற்சியை பலர் பாராட்டுவதோடு, இந்த ஆறு படங்களை இயக்கிய ஆறு இயக்குநர்களுக்கும் முழுநீளத்திரைப்படம் இயக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறதாம்.
இந்த நிலையில், இந்த ஆறு படங்களில் ஒரு படத்தை இயக்கிய கேபிள் சங்கர், விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறாராம். சமீபத்தில் இவர் விக்ரமிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை விக்ரமும் ஓகே சொல்லிவிட்டதோடு, தயாரிப்பாளரும் ரெடியாகிவிட்டாராம்.

விக்ரம் தேதி கொடுத்தால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட கேபிள் சங்கர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...