தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 40 புதுப்படங்கள் வெளியாகமல் முடங்கி போயுள்ளது. இதனால், சுமார் 40 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், சென்னையில் உள்ள திரையரங்கங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருவதோடு, பழைய படங்களை ரிலீஸ் செய்து நல்ல முறையில் கல்லா கட்டியும் வருகிறார்களாம்.
அந்த வரிசையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘6 அத்தியாயம்’ என்ற படமும் தற்போது நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆறு குறும்படங்களை ஒன்றாக தொகுத்து, ஒரு திரைப்படமாக உருவாக்கிய இப்படத்தின் முயற்சியை பலர் பாராட்டுவதோடு, இந்த ஆறு படங்களை இயக்கிய ஆறு இயக்குநர்களுக்கும் முழுநீளத்திரைப்படம் இயக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறதாம்.
இந்த நிலையில், இந்த ஆறு படங்களில் ஒரு படத்தை இயக்கிய கேபிள் சங்கர், விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறாராம். சமீபத்தில் இவர் விக்ரமிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை விக்ரமும் ஓகே சொல்லிவிட்டதோடு, தயாரிப்பாளரும் ரெடியாகிவிட்டாராம்.
விக்ரம் தேதி கொடுத்தால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட கேபிள் சங்கர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...