Latest News :

தென்னிந்தியா அளவில் விஜய்க்கு கிடைத்த புதிய பெருமை!
Monday March-19 2018

’மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் விஜய் கொல்கத்தா செல்ல உள்ளார்.

 

இந்த நிலையில், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகர்கள் என்றால் ரஜினியும், சிரஞ்சீவியும் இருந்த நிலையில், தற்போது அவர்களை விஜய் பின்னுக்கு தள்ளி முன்னிலைப் பெற்றுள்ளார்.

 

தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல் வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு.

 

எனவே, ஒரு நடிகராக பெரிய ஹிட்ஸ் கொடுத்திருப்பது விஜய் தான் என்பதால், தற்போதைய தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய் தானாம்.

Related News

2197

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...