’மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் விஜய் கொல்கத்தா செல்ல உள்ளார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகர்கள் என்றால் ரஜினியும், சிரஞ்சீவியும் இருந்த நிலையில், தற்போது அவர்களை விஜய் பின்னுக்கு தள்ளி முன்னிலைப் பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல் வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு.
எனவே, ஒரு நடிகராக பெரிய ஹிட்ஸ் கொடுத்திருப்பது விஜய் தான் என்பதால், தற்போதைய தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய் தானாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...