Latest News :

எடிட்டர் அணில் மல்னாட் மரணம் - நாஞ்சில் பி.சி.அன்பழகன் அஞ்சலி!
Monday March-19 2018

பிரபல படத்தொகுப்பாளர் அணில் மல்னாட் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 19) காலை 7.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான ‘சித்தாரா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற அணில் மல்னாட், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கிழக்கு வாசல்’, நாஞ்சில் பி.சி.அன்பழன் இயக்கிய ‘அய்யா வழி’ என ஏராளமான வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அவர் சுமார் 600 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். நந்தி விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், உடல் நலக்குறைவுக் காரணமாக அணில் மல்னாட் இன்று மரணம் அடைந்தார். சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரம், நெல்லையப்பர் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

’காமராசு’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி தயாரித்திருக்கும் நாஞ்சில் பி.சி.அன்பழகன், நேரில் சென்று அணில் மல்னாட் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் கேமராமேனும் உடன் சென்றார்.

 

அணில் மல்னாட்டின் இறுதிச் சடங்கு நாளை (மார்ச் 20) காலை 7 மணிக்கு குரோம்பேட்டை மையானத்தில் நடைபெற உள்ளது.

Related News

2203

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...