’விஸ்வாசம்’ மூலம் இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித், இப்படத்தில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று சிவாவுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ கதை குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கதைப்படி அஜித் திருநெல்வேலியை சேர்ந்தவராம். திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வருபவர், வட தாதாவுடன் ஏற்பட்ட மோதலினால் அவரும் வட சென்னை தாதாவாகிடுகிறாராம். பிறகு அரசியலில் நுழைவது போல கதை நகருமாம். மேலும், படம் முழுவதும் அஜித் திருநெல்வேலி தமிழ் தான் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...