’விஸ்வாசம்’ மூலம் இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித், இப்படத்தில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று சிவாவுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ கதை குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கதைப்படி அஜித் திருநெல்வேலியை சேர்ந்தவராம். திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வருபவர், வட தாதாவுடன் ஏற்பட்ட மோதலினால் அவரும் வட சென்னை தாதாவாகிடுகிறாராம். பிறகு அரசியலில் நுழைவது போல கதை நகருமாம். மேலும், படம் முழுவதும் அஜித் திருநெல்வேலி தமிழ் தான் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...