தனது கண்சிமிட்டல் மூலமாக ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்கள் கண் தன் மீது பட வைத்துள்ள பிரியா வாரியர், முன்னணி ஹீரோயின்களுக்கு சமமாக ரசிகர்களைக் கொண்ட நடிகையாக உருவெடுத்துள்ளார். அதுமட்டும் அல்ல எங்கு சென்றாலும் அவரைப் பெற்றி தான் பேச்சு அடிபடுகிறது.
முன்னணி பத்திரிகை, டிவி சேனல், இணையதளம் என்று ஊடகங்கள் பிரியா வாரியரை தேடி தேடி பேட்டி எடுத்து வருகிறார்கள். மேலும் பல சினிமா வாய்ப்புகளும் பிரியா வாரியரை தேடிச் செல்கின்றனவாம்.
இந்த நிலையில், கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரது படத்தில் பிரியா வாரியர் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஹீரோ சூர்யாவாம். ஆம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில் கண்சிமிட்டல் நடிகை பிரியா வாரியர் தான் ஹீரோயினாம்.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில், ’என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். இப்படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இப்படத்தை படமாக்க திட்டமிட்டுள்ள கே.வி.ஆனந்த், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா வாரியரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். தற்போது அதற்கான பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...