Latest News :

மீண்டும் சீரியல் பக்கம் வந்த செந்தில்!
Tuesday March-20 2018

’மதுரை’ என்ற சீரியல் மூலம் நடிகரான செந்தில், ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகரானார். அத்துடன் சில டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய அவர், பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் ‘பப்பாளி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். அதன் பிறகு ‘வெண்ணிலா வீடு’, ’ரொம்ப நல்லவண்டா நீ’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், செந்திலுக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

எப்படியாவது தானும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க ஹீரோவாகிவிட வேண்டும் என்று செந்தில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப்போக அவர் மீண்டும் தனது பழைய பணியான ரேடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல தொடங்கினார்.

 

இந்த நிலையில், தன்னை பிரபலமாக்கிய சீரியலில் மீண்டும் செந்தில் எண்ட்ரியாகியுள்ளார். ஆம், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் செந்தில் தான் ஹீரோ. அதுமட்டும் அல்ல இந்த சீரியலில் அவருக்கு இரட்டை வேடமாம்.

 

வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை திருதாய் செல்வம் இயக்கியுள்ளார்.

Related News

2216

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery