Latest News :

மீண்டும் சீரியல் பக்கம் வந்த செந்தில்!
Tuesday March-20 2018

’மதுரை’ என்ற சீரியல் மூலம் நடிகரான செந்தில், ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகரானார். அத்துடன் சில டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய அவர், பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் ‘பப்பாளி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். அதன் பிறகு ‘வெண்ணிலா வீடு’, ’ரொம்ப நல்லவண்டா நீ’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், செந்திலுக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

எப்படியாவது தானும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க ஹீரோவாகிவிட வேண்டும் என்று செந்தில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப்போக அவர் மீண்டும் தனது பழைய பணியான ரேடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல தொடங்கினார்.

 

இந்த நிலையில், தன்னை பிரபலமாக்கிய சீரியலில் மீண்டும் செந்தில் எண்ட்ரியாகியுள்ளார். ஆம், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் செந்தில் தான் ஹீரோ. அதுமட்டும் அல்ல இந்த சீரியலில் அவருக்கு இரட்டை வேடமாம்.

 

வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை திருதாய் செல்வம் இயக்கியுள்ளார்.

Related News

2216

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery