தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறியதோடு, அதற்கு தனது கணவர் வீட்டாரிடம் சம்மதமும் வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் போதிய அளவு வரவில்லையாம். இதனால், தான் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் சமந்தா இருக்கிறாராம்.
அதே சமயம், அவருக்கு வரும் பட வாய்ப்புகளை இனிப்பு கடையின் பெயர் கொண்ட நடிகை ஒருவர் தட்டி பறித்துவிடுகிறாராம். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சமந்தா, அந்த இனிப்பு கடை நடிகைக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருவதோடு, அதற்கான பிளானும் போடுவதாக கூறப்படுகிறது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...