தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய வேலை நிறுத்தம், தற்போது தமிழ் திரையுலகமே முடங்கிப் போகும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ள நிலையில், தங்களோட கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும், என்று விஷால் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் விஷால் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு எம்.எல்.ஏ-வை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். அவர்களை விட அதிக பாப்புலாரிட்டியோட இருக்கேன். இருந்தும் மக்களின் குரலை எதிரொலிக்கணும்னு நினைச்சு தான் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டேன். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்தே வட சென்னையிஐ கவனிக்கிறேன். அங்கே உள்ள மக்களோட பிரச்சனைகள் எனக்குத் தெரியும். கட்சி தொடங்குவேனா இல்லையா என்ற என் அரசியல் நிலைப்பாட்டை 2019 தேர்தல் காலகட்டத்துல சொல்லுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...