தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய வேலை நிறுத்தம், தற்போது தமிழ் திரையுலகமே முடங்கிப் போகும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ள நிலையில், தங்களோட கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும், என்று விஷால் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் விஷால் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு எம்.எல்.ஏ-வை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். அவர்களை விட அதிக பாப்புலாரிட்டியோட இருக்கேன். இருந்தும் மக்களின் குரலை எதிரொலிக்கணும்னு நினைச்சு தான் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டேன். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்தே வட சென்னையிஐ கவனிக்கிறேன். அங்கே உள்ள மக்களோட பிரச்சனைகள் எனக்குத் தெரியும். கட்சி தொடங்குவேனா இல்லையா என்ற என் அரசியல் நிலைப்பாட்டை 2019 தேர்தல் காலகட்டத்துல சொல்லுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...