‘AAA' படத்திற்குப் பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகளையே எதிர்க்கொண்ட சிம்பு மீது அப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் பல குற்றச்சாட்டுக்களை கூறி வந்ததால், ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்.
இதற்கிடையே, மணிரத்னம் படத்திற்காக தன்னை தயாரிப்படுத்திக் கொண்டிருக்கும் சிம்பு, தற்போது ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம். அதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜா தான்.
’மெட்ரோ’ புகழ் சிரிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள “நா யாருன்னு தெரியுமா” என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேர் யூடியுபில் இப்பாடலை பார்த்துள்ளனர்.
இந்த விஷயம் சிம்புவுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், ‘ராஜா ரங்குஸ்கி’ ஹீரோ சிரிஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை அழைத்து சிம்பு பாராட்டியுள்ளார். மேலும், இந்த பாட்டு போல, படமும் மிகப்பெரிய ஹிட் ஆகும், என்று அவர்களிடம் கூறி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...