சைலண்டாக ஆரம்பித்த சினிமா வேலை நிறுத்த போராட்டம் தற்போது பல சினிமா தொழிலாளர்களின் கூக்குரலிடம் அளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. விஷால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாரதவிதமாக நடிகர் சிம்பு கலந்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிட்ட சிம்பு, கூட்டத்தில் கலந்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூட்டத்தில் அவர் என்ன பேசினார்? என்று அறிந்துக்கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டினார்கள். தற்போது கூட்டத்தில் சிம்பு பேசியது வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சிம்பு, தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். அவர்களின் சம்பளத்தை குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் கருப்பு பணத்தில் சினிமா எடுப்பதை நிறுத்துங்கள். அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து ஒழுங்காக வரிக்கட்டி கணக்கு காட்டுங்கள்.
ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்குகிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார், என்பது அந்த படத்தில் நடிக்கும் நடிகருக்கு தெரிய வேண்டும். சினிமாவில் கருப்பு பணத்தை ஒழியுங்கள், அனைத்துமே சரியாகிவிடும், என்று பேசியுள்ளார்.
சிம்புவின் இத்தகைய பேச்சை வரவேற்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...