‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ‘செக்க சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திரைத்துரையின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தற்போது பாதியிலேயே நிற்கிறது.
பல நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரவிந்த்சுவாமி, ஜோதிகா ஆகியோரது காம்பினேஷன் காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், திரைத்துறை வேலை நிறுத்தம் முடிந்த பிறகு வட மாநிலங்களுக்கு பயணிக்க முடிவு செய்துள்ளாராம்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...