‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ‘செக்க சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திரைத்துரையின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தற்போது பாதியிலேயே நிற்கிறது.
பல நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரவிந்த்சுவாமி, ஜோதிகா ஆகியோரது காம்பினேஷன் காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், திரைத்துறை வேலை நிறுத்தம் முடிந்த பிறகு வட மாநிலங்களுக்கு பயணிக்க முடிவு செய்துள்ளாராம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...