ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தால் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நிறுத்தப்பட்ட விஜய் படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதியோடு மீண்டும் சென்னையில் நடைபெற தொடங்கியது. இதற்கு தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், செட் போடப்பட்டு விட்டதால், 3 நாட்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்வதற்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. என்னதால் விளக்கம் அளித்தாலும், விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்ததற்கு நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் விஜய் ரசிகர்களை திடீரென்று சந்தித்துள்ளார். விஜய் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு தளம் அருகே சூழ்ந்துக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்த விஜய், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும், என்று அறிவுரை கூறினாராம்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...