தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்.
ஸ்ரேயாவின் திருமணத்தில் அவரது அம்மாவுக்கு விருப்பம் இல்லாததால் தான் அவர் அறிவித்த தேதிக்கு முன்பாகவே திருமணம் செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயா ரஷ்யா செல்வாரா அல்லது இந்தியாவில் தான் இருப்பாரா, என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்த நிலையில், மூத்த நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆம், தெலுங்குப் படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பது குறித்து எதுவும் சொல்லாத ஸ்ரேயா, தற்போது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பை தொடங்காமல் தவித்த இயக்குநர் தேஜா, மும்பையிலும் ஹீரோயின் தேட, அங்கேயும் நோ என்ற வார்த்தை தான் பதிலாக கிடைத்திருக்கிறது. இதனால் இறுதியாக ஸ்ரேயாவிடம் கேட்க, அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
மொத்தத்தில், தனது ஹனிமூனை கேன்சல் செய்துவிட்ட ஸ்ரேயா, மூத்த நடிகரான வெங்கடேஷுடன் டூயட் பாட தயாராகிவிட்டாரம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...