தமிழக அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன், ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ஒரு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதற்கு, அவரது ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒரு ஊழல் மற்றும் துர்பாக்கியமான விபத்து போதும் என்றால், ஏன் தமிழகத்தில் எந்த கட்சியும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. போதுமான குற்றங்கள் நடைபெற்று விட்டது.
என்னுடைய நோக்கம் ஒரு சிறந்த தமிழகமே. என்னுடைட கருத்தினை வலிமைப்படுத்த யாருக்கு தைரியம் உள்ளது?. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் என் குரலுக்கு உதவும் கருவிகள். இந்தக் கட்சிகள் சரியில்லை என்றால் வேறு கட்சியை தேடுவோம்.
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...