தமிழ் சினிமா மட்டும் அல்ல உலக சினிமா வரலாற்றில் நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களைக் காட்டிலும் விலங்குகள் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கூட ஹீரோக்களுக்கு இணையாக விலங்குகள் நடித்திருக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தமிழ் சின்மாவில் நாயை மையப்படுத்திய அட்வென்சர் படம் ஒன்று உருவாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு கன மழையால் பெரு வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டிருந்த போது வெளியான ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி தான் இந்த நாய் அட்வென்சர் படத்தை எழுதி இயக்குகிறார்.

ஒரு நாய்க்கும், மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும், ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் மையமாக வைத்து உருவாக உள்ள இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விதத்தில் அட்வென்சர் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...