தமிழ் மக்களிடம் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தெய்வமகள்’ சீரியலில் கொடூர வில்லி வேடத்தில் நடித்தார் காயத்ரி. சீரியலில் ஹீரோயின் சத்யாவுக்கு நிகரான வலுவான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது முன்னணி சீரியல் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரேகா கிருஷ்ணப்பா என்பது தான் காயத்ரியின் உண்மையான பெயர். தெய்வமகள் சீரியலை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் சீரியல்களில் நடித்து வரும் இவர், சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரேகா கிருஷ்ணப்பா தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரால் அடிக்கடி அழ வைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீரியலில் ரொம்ப போல்டான பெண் வேடத்தில் நடித்தாலும் ரேகா, ரொம்பவே சென்சிட்டிவ் ஆனவராம்.
தெய்வமகள் சீரியலில் ரேகாவின் கணவராக குமார் வேடத்தில் நடித்த பிரகாஷ் அதிகம் கிண்டல் செய்வாராம். இதனால் சில நேரங்களில் ரேக கதறி அழுதுவிடுவாராம். அதேபோல், அவரது வீடியோவுக்கு கதாபாத்திரத்தை தாண்டி சிலர் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் கமெண்டுக்கு பதில் அளிக்க முயற்சி செய்து பிறகு செய்யாமல் விட்டுவிடுவாராம்.
இப்படி ரொம்ப பயந்தா சுபாவம் கொண்ட ரேகா கிருஷ்ணப்பா, சீரியல்களில் புலியாக நடித்தாலும் உண்மையில் எலியாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...