சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அவருக்கும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனக்கு நாகசைதன்யாவுடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது, என்று கூறி சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ‘ஏமாயசேசவே’ என்ற படத்துக்காக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது.
இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது.
திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு...
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...
அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...