டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கம் அதிகமான கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை நிருத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.
முதலில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற அடிப்படையில் போராட்டத்தை தொடங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம், தற்போது படப்பிடிப்புகள் ரத்து மற்றும் பின்னணி வேலைகளுக்கு தடை என்று போராட்டத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் கணக்கான சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த போராட்டத்திற்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கம் என அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே சயமம், மூத்த நடிகரான ரஜினிகாந்த், தான் என்றுமே வேலை நிறுத்தத்தை ஆதரிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அரவிந்த்சாமி, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்காக யோசனை ஒன்றை சமூக வலைதளம் மூலம் கூறியிருப்பவர், என்னை பொறுத்தவரை மாஸ்டரிங் அல்லது விபிஎப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக் கொண்டால் தான் கண்டெண்ட் சிதையாமல் இருக்கும். அதேபோல் அந்த கண்டெண்டால் வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். எந்த விளம்பரம் எவ்வளவு கட்டணம் என்பதை எல்லாம் முடிவு செய்யலாம். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம். இப்படி செய்தால் முதலீடு செய்பவருக்கு லாபம் சரியாகப் போய்ச் சேரும். தொழிநுட்பத்தை செயல்படுத்துபவருக்கு அல்ல, என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த்சாமியின் இந்த ஐடியா குறித்து சிலர் அவருடன் ட்விட்டர் விவாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...