கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டண வசூலிப்பை குறைக்க வேண்டும், திரையரங்கத்தில் டிக்கெட் விலை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேஷன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து போராட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, போராட்டத்தின் அவசியத்தை விஷால் ரஜினியிடம் விளக்கி கூறினாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த், இறுதியில் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தயாரிப்பாளர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் அதே சமயம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட கூடாது, என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...