கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டண வசூலிப்பை குறைக்க வேண்டும், திரையரங்கத்தில் டிக்கெட் விலை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேஷன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து போராட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, போராட்டத்தின் அவசியத்தை விஷால் ரஜினியிடம் விளக்கி கூறினாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த், இறுதியில் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தயாரிப்பாளர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் அதே சமயம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட கூடாது, என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...