சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் வையாபுரி, போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த போது பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி அவருக்கு கைகொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.
இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜூலி, ஓவியா, ரைசா, ஆரவ் போன்றவர்கள் பிரபலமடைந்தது போல வையாபுரி பிரபலமாகவில்லை, அதேபோல் அவர்களுக்கு கிடைப்பது போன்ற பட வாய்ப்புகளும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சமயத்தில் அதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் வையாபுரியுடன் தொடர்பில் இருந்தார்களாம். தற்போது ஆரவ், காயத்ரி ரகுராம், சினேகன் மற்றும் ஆர்த்தி ஆகிய நான்கு பேர் மட்டுமே வையாபுரியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம், மற்றவர்கள் அவர் போன் செய்தால் கூட போனை எடுப்பதில்லையாம். இதனால் வருத்தமடைந்துள்ள வையாபுரி, இந்த விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அவர்களும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...