சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் வையாபுரி, போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த போது பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி அவருக்கு கைகொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.
இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜூலி, ஓவியா, ரைசா, ஆரவ் போன்றவர்கள் பிரபலமடைந்தது போல வையாபுரி பிரபலமாகவில்லை, அதேபோல் அவர்களுக்கு கிடைப்பது போன்ற பட வாய்ப்புகளும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சமயத்தில் அதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் வையாபுரியுடன் தொடர்பில் இருந்தார்களாம். தற்போது ஆரவ், காயத்ரி ரகுராம், சினேகன் மற்றும் ஆர்த்தி ஆகிய நான்கு பேர் மட்டுமே வையாபுரியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம், மற்றவர்கள் அவர் போன் செய்தால் கூட போனை எடுப்பதில்லையாம். இதனால் வருத்தமடைந்துள்ள வையாபுரி, இந்த விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அவர்களும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...