‘மெர்சல்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் பார்வையை மட்டும் இன்றி, இந்திய அரசியல்வாதிகளின் பார்வையையும் தன் மீது வைத்த நடிகர் விஜய், சத்தமில்லாமல் அரசியல் பிரவேசத்திற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.
மாவட்டம் வாரியாக தனது மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சேர்க்கும் பணியை முடக்கிவிட்டவர், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தனது மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் மூலம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் ஆதரவு அதிமுக-வுக்கு வேண்டும் என்று கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜய் பல ஆண்டுகளாக வசித்து வரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடியேறியுள்ளார். அதேபோல், தான் பயன்படுத்தி வந்த காரையும் திடீரென்று மாற்றிவிட்டாராம்.
தற்போது, நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள வீட்டில் குடியேறியிருக்கும் விஜய், எப்போதும் படப்பிடிப்புக்கு சிப்ட் காரில் தான் வருவாராம். ஆனால், கடந்த சில நாட்களாக இன்னோவா காரில் வந்துக்கொண்டிருக்கிறாராம்.
வீடு, கார் என விஜயின் இந்த மாற்றத்திற்கு பின்னால் அரசியலுக்கான செண்டிமெண்ட் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதாவது, சினிமாவில் உச்சத்துக்கு சென்ற விஜய் அரசியலில் எப்படி வருவார், என்று ஜாகதம் பார்த்து அதற்கு ஏற்றவாறு இந்த மாற்றங்களை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...