Latest News :

தொடரும் சினிமா வேலை நிறுத்தம் - முதல்வரிடம் முறையிட விஷால் முடிவு!
Saturday March-31 2018

கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால், வேலை நிறுத்தம் தொடரும் என்று நேற்று அறிவித்துள்ளது.

 

அதே சமயம், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும், திரையரங்கங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று, தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளார்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிகா தலைவர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பல சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள்.

 

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசுகையில், “பொது மக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் போது எந்தவித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை புது படங்கள் ரிலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். முதல்வர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

 

அடுத்த வாரம் புதன்கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்ட்டமான ஒன்றாக தான் இருக்கும். ஆனால் அதற்கான தகுந்த தீர்வு விரைவில் கிடைக்கும்.” என்றார்.

Related News

2305

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

Recent Gallery