சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாயி’. இதில் வடிவேலு பெண் பார்க்க போகும் காட்சி ஒன்றில் மின்னல் என்ற வேடத்தில் நடித்தவர் தீபா. இந்த காமெடி காட்சி பிரபலமானதால் தீபாவும் சினிமாவில் கொஞ்சம் பிரபலமானார்.
ஆனால், போதிய சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒதுங்கியிருந்தவர் தற்போது பிரபல டிவி சேனலில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ள தீபா, “நான் முதலில் மாயி படத்தில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு சினிமா ஆர்வம் தொற்றிக் கொண்டது. பேர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. காரணம், சினிமாவில் நடிப்பை விட முக்கியமாகப் பெண்களிடம் அட்ஜஸ்ட்மெண்டை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் தான் எனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
வலியபோய் வாய்ப்பு கேட்டால் அட்ஜச்ட்மெண்டுக்கு ரெடியா, என்று நேரடியாகவே கேட்கிறார்கள். இதனாலே யாரிடமும் வாய்ப்பு கேட்க போனதில்லை. என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை நினைத்து பல தடவை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.” என்றார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...