சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாயி’. இதில் வடிவேலு பெண் பார்க்க போகும் காட்சி ஒன்றில் மின்னல் என்ற வேடத்தில் நடித்தவர் தீபா. இந்த காமெடி காட்சி பிரபலமானதால் தீபாவும் சினிமாவில் கொஞ்சம் பிரபலமானார்.
ஆனால், போதிய சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒதுங்கியிருந்தவர் தற்போது பிரபல டிவி சேனலில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ள தீபா, “நான் முதலில் மாயி படத்தில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு சினிமா ஆர்வம் தொற்றிக் கொண்டது. பேர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. காரணம், சினிமாவில் நடிப்பை விட முக்கியமாகப் பெண்களிடம் அட்ஜஸ்ட்மெண்டை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் தான் எனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
வலியபோய் வாய்ப்பு கேட்டால் அட்ஜச்ட்மெண்டுக்கு ரெடியா, என்று நேரடியாகவே கேட்கிறார்கள். இதனாலே யாரிடமும் வாய்ப்பு கேட்க போனதில்லை. என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை நினைத்து பல தடவை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...