2.0 மற்றும் காலா என்று ரஜினியின் இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளதால், அவரது ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் இருந்த நிலையில், சினிமா ஸ்டிரைக் அவர்களது சந்தோஷத்தை சோகமாக மாற்றியுள்ளது.
காலா ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கடந்த ஒரு மாதமாக எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகவில்லை. இந்த வேலை நிறுத்தம் இந்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் தொடரும் என்று விஷால் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். இருந்தாலும், ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் வேலை நிறுத்தத்தை முடித்துவிடுவார்கள் என்று கூறப்படுவதால், காலா நிச்சயம் ரிலிஸாகிவிடும் என்ற நம்பிக்கையும் ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், என்று ரஜின்காந்த் கூறியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், ரஜினியின் காலா படத்தையும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம், என்று கூறியுள்ள அந்த அமைப்புகள் கர்நாடகாவின் பல இடங்களில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சினிமா போராட்டம் முடிவுக்கு வந்தாலும், கன்னடர்களின் போராட்டத்தினால் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளில் ‘காலா’ ரிலிஸாகத நிலை ஏற்பட்டுள்ளதால். ரஜினி உள்ளிட்ட காலா குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...