பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடர்வதால், இம்மாதம் படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளில் ‘காலா’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம், என்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ரஜினி தரப்பு ரொம்பவே சோகத்தில் இருக்கிறார்களாம்.
இந்த நிலையில், ’காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அதிகாரிகள் 14 கட் கொடுத்திருக்கிறார்களாம். இத்தனை கட் கொடுத்த பிறகும் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம்.
இதனால், தணிக்கை விவகாரத்தில் அதிருப்தியடைந்திருக்கும் ‘காலா’ படக்குழு மறுதணிக்கைக்குச் செல்லும் முடிவில் இருக்கிறதாம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...