காவேரி வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் சில பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா ஐபிஎல் போட்டியின் தொடக்க விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறாராம்.
‘மெர்க்குரி’, ‘சார்லி சாப்ளின் 2’, ’லட்சுமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபு தேவா, சல்மான் கானை வைத்து படம் ஒன்றை இயக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இப்படி பிஸியாக இருந்தாலும், ஐபிஎல் குழு கேட்டுக்கொண்டதால், ஐபிஎல் தொடக்க விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டாராம்.
நாளை (ஏப்.6) நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில், 1 மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ள பிரபு தேவா, இதில் ஹிருத்திக் ரோஷன், வருன் தவான், தமன்னா உள்ளிட்ட பல இந்தி நடிகர்களையும் பங்கேற்க செய்துள்ளாராம்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...