தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஒன்றரை மாதமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினால் கடந்த ஒன்றரை மாதமாக எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகததோடு, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கும் அதிக கட்டணத்தை குறைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டத்தை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் எப்போது முடியும், என்பதே தெரியாமல் போய்க்கொண்டிருக்க, இதனால் திரையரங்க ஊழியர்கள் பணி இழந்ததோடு, சினிமா தொழிலாளர்களும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஸ்டிரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன், என்று பிரபல சினிமா பிரமுகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளரான் தனபால், என்பவர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியதோடு, விஷால் - செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை செய்து வருவதாகவும், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் விஷால் முன் கண்டிப்பாக தீக்குளிப்பேன். அப்படி இறந்தால் தான் எல்லோருக்கும் தெரிய வருகிறது, என்றும் கூறியிருக்கிறார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...