Latest News :

ஐபில் போட்டிகளில் சென்னை அணியினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆட வேண்டும் - ரஜினிகாந்த்
Sunday April-08 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பற்கேற்க செல்கிறேன். வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்கவில்லை என்றால், தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.

 

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை மூடிதான் ஆக வேண்டும். இப்போதைக்கு தனியாக போராட்டம் எதுவும் நடத்தப் போவதில்லை.

 

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடு முழுவதும் கவனத்தை பெறலாம்.” என்று தெரிவித்தார்.

Related News

2345

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery