Latest News :

ஐபில் போட்டிகளில் சென்னை அணியினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆட வேண்டும் - ரஜினிகாந்த்
Sunday April-08 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பற்கேற்க செல்கிறேன். வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்கவில்லை என்றால், தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.

 

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை மூடிதான் ஆக வேண்டும். இப்போதைக்கு தனியாக போராட்டம் எதுவும் நடத்தப் போவதில்லை.

 

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடு முழுவதும் கவனத்தை பெறலாம்.” என்று தெரிவித்தார்.

Related News

2345

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery