Latest News :

ஐபில் போட்டிகளில் சென்னை அணியினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆட வேண்டும் - ரஜினிகாந்த்
Sunday April-08 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பற்கேற்க செல்கிறேன். வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்கவில்லை என்றால், தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.

 

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை மூடிதான் ஆக வேண்டும். இப்போதைக்கு தனியாக போராட்டம் எதுவும் நடத்தப் போவதில்லை.

 

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடு முழுவதும் கவனத்தை பெறலாம்.” என்று தெரிவித்தார்.

Related News

2345

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery