பிரபல மாடலாக இருந்த ஜனனி ஐயர், ‘திரு திரு துறு துறு’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர், பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ’பாகன்’, ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ’பலூன்’, ‘விதி மதி உல்டா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து வரும் ஜனனி ஐயருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இருந்தாலும், சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும், மாடலிங் துறை எனது கையில் இருக்கிறது. அது எனக்கு கைகொடுக்கும், என்று தன்னம்பிக்கையோடும் அவர் வலம் வருகிறார்.
இந்த நிலையில், ஜனனி ஐயர் பற்றி இதுவரை தெயாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதை அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, ஜனனி ஐயர் என்ஜினியரிங் படித்தவராம். அவர் படிப்புக்கு ஏற்ற வேலையை அவர் தேடியிருந்தால், இன்றைக்கு எதாவது ஒரு சாப்ட்வேட் கம்பெனியில் இருந்திருப்பாராம், அல்லது வெளிநாட்டில் எங்கேயாவது வேலை செய்துக் கொண்டிருப்பாராம். படித்த துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்று விரும்பாமல், சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று ஜனனி விரும்பினாராம். அவரது விருப்பத்திற்கு அவரது அம்மா ஆதரவாக இருந்ததால், தற்போது அவர் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
ஜனனி ஐயர் ஒரு என்ஜினியரிங் பட்டதாரி என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த தகவலை அவரே பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறினார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...