பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதிய திரைப்படங்கள் ரிலிஸுக்கு தடை, படப்பிடிப்புகள் ரத்து, சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை பல்வேறு தடைகளோடு நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துள்ளது.
மேலும், ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது நலனுக்காக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபுவின் நன்கொடையை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலார்கள் சங்கமான பெப்ஸிக்கு நன்கொடை வழங்க முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...