Latest News :

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய எஸ்.ஆர்.பிரபு
Sunday April-08 2018

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

 

திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதிய திரைப்படங்கள் ரிலிஸுக்கு தடை, படப்பிடிப்புகள் ரத்து, சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை பல்வேறு தடைகளோடு நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துள்ளது.

 

மேலும், ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது நலனுக்காக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

எஸ்.ஆர்.பிரபுவின் நன்கொடையை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலார்கள் சங்கமான பெப்ஸிக்கு நன்கொடை வழங்க முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2348

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery