காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட நிலையில், நடிகர் அஜித் பங்கேற்கவில்லை.
போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டதால், அஜித் போராட்டம் முடிவதற்குள் வந்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அஜித் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாதது, நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது.
ரசிகர்கள் வேண்டாம், தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன், என்று சில கட்டுப்பாடுகளுடன் வாழும் அஜித், இதற்கு முன்பு சில பிரச்சினைகளுக்காக நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இன்று நடைபெறும் போராட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்ற அனைவரது எதிர்ப்பார்ப்பையும் அவர் ஏமாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், அஜித் போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிலர், அஜித் ரசிகர்கள் வேண்டாம் என்று முடிவு எடுத்தது போல, தற்போது தமிழர்களும் வேண்டாம், அவர்களது பிரச்சினையும் வேண்டாம், என்று முடிவு எத்துவிட்டார் போலிருக்கு, என்று கூறி வருகிறார்கள்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...