அஞ்சலி - ஜெய் இருவரும் காதலிக்க, நடுவில் ஜனனி ஐயர் எப்படி!, என்று யோசிக்காதிங்க, அஞ்சலி ஜெய்யை நிஜத்தில் காதலிக்கிறார் என்றால், ஜனனி ஐயர் படத்தில் காதலிக்கிறார். ஆம், ‘பலூன்’ திரைப்படன் அஞ்சலியுடன் மற்றொரு நாயகியாக ஜனனி ஐயரும் நடிக்கிறார்.
1980 ஆம் ஆண்டு பின்னணியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜனனி ஐயர், மிகவும் கட்டுக்கோப்பான ஜெய்யை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறாராம். அவரது வேடம் குறித்து இயக்குநர் சினிஷ், அவரிடம் கூறிய போது ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி நடித்த வெகுலித்தனமாக நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்.
காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்படி ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் இருக்கிறது. அவரது நடிப்புக்கு ஈடு இணையாக நடிக்கவே முடியாது, என்று ஜனனி ஐயர் தனது மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும், ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, சிறப்பாக நடித்து முடித்தாராம்.
இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களில், தன்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ‘பலூன்’ படத்தின் கதாபாத்திரம் தான் என்று கூறும் ஜனனி ஐயர், நிச்சயம் ரசிகர்களிடம் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...