அஜித் ரொம்ப நல்லவர், வல்லவர், நேர்மையானவர், நியாயமானவர் என்று பல சினிமா பிரபலங்கள் சொல்வதை நாம் கேட்டதுண்டு. ஆனால், இன்று இதற்கு மாறாக ஒருவர் அவரை கழுவி ஊத்தியதை கேற்க நேர்ந்தது.
இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் நடத்திய போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சத்யராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
அதே சமயம், பிரகாஷ்ராஜ், அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவில்லை. இவர்களில் அஜித்தும் ஒருவர்.
தனது திரைப்படங்களில் நிகழ்ச்சிகளிலேயே பங்கேற்காத அஜித், இதுபோன்ற மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துக்கொள்வது வழக்கமான ஒன்று என்பதால், நேற்றைய போராட்டத்தில் அவர் நிச்சயம் கலந்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் கடைசி வரை வராதது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது.
அஜித்தை எதிர்ப்பார்த்து ஏமாந்துப் போனவர்களில் ஒருவர், தமிழர்களுக்காக அவரால் வரமுடியாமல் போய்விட்டதா? திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கிமீ அவரால் பயணம் செய்ய முடியாதா? அவர் வீட்டை விட்டு வரவே மாட்டாரா? என்று திட்டி தீர்த்துவிட்டார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...