பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக திரையிடப்பட்ட காலா படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 14 கட் கொடுத்ததோடு, படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், மேல் முறையீடு செய்ய காலா படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இம்மாதம் 27 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இதற்குள்ளாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ’காலா’ படத்தின் விமர்சனத்தை சென்சார் குழு அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள் (UAE)யை சேர்ந்த பத்திரிகையாளரும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சாந்து என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “காலா பர்ஸ்ட் காபி வந்துவிட்டது. மாஸ் என்டெர்டெயினர். இதற்கு முன் உள்ள கோலிவுட் சாதனைகளை இந்த படம் முறியடித்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...