காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் நடிகர் நடிகைகள் மவுன போராட்டம் நடத்தினார்கள். இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று திடீரென்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில், இயக்குநர்கள் அமீர், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, தொடங்கப்பட்டு இருப்பதாக கூறியதோடு, இந்த பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள், என்று தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். காவிரி போராட்டத்தை திசை திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும், என்றும் தெரிவித்தார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...