ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மகேஷ் பாபுவுக்காக, சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இவ்விழா, கோடம்பாக்கத்தின் மிக பிரம்மாண்டமான விழாவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘ஸ்பைடர்’ படத்திற்காக மகேஷ் பாபு, தனது சொந்த குரலிலில் தமிழ் டப்பிங் பேசியிருப்பது இப்படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய ஹீரோவாக இருந்தாலும், செய்வதை சரியாக செய்ய வேண்டும் என்ற காரணத்தால், தமிழில் சொந்தமாக டப்பிங் பேச வேண்டும் என்ற மகேஷ் பாபு அவர்களின் இந்த தொழில் பக்தியும், நேர்மையும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரது தமிழும், தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது. சென்னையில் அவர் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தது அவரது தமிழிற்கு மிகவும் தவியுள்ளது. சென்னையுடனான நெருக்கம், அவரை இங்கும் வெற்றி பெற, பெரிய உந்துலதாக இருக்கின்றது, என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ‘தாகூர் பிலிம்ஸ்’ மது கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...