Latest News :

பிரபல ரேடியோ ஜாக்கி கொலை - பின்னணியில் பெண்!
Tuesday April-10 2018

கேரளாவை சேர்ந்த பிரபல எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றி வரும் ராஜேஷ் கடந்த மார்ச் மாதம் கொலை செய்ய செய்யப்பட்டார். 

 

தனியாக ஸ்டுடியோ வைத்திருந்த ராஜேஷ், அதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில், நள்ளிரவில் ஸ்டுடியோவில் வைத்து மர்ம கும்பல் அவரை கொலை செய்தது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், துபாயில் தலைமறைவான 4ம் குற்றவாளியான சலிஹ் பின் ஜலாஜ் என்பவரை துபாய் போலீசின் உதவியோடு கேரள போலீசார் கைது செய்தனர். 

 

மேலும், இரண்டாம் குற்றவாளியான அப்துல் சதார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு முன்பாக ஆயுதம் சப்ளை செய்ததற்காக சனு என்பவரும், குற்றவாளிகள் வெளிநாடு தப்ப உதவிய சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

RJ Rajesh

 

கைது செய்யப்பட்டவர்களின் போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல் சதாரின் மனைவி துபாயில் பிரபல டான்சராக இருக்கிறாராம். துபாயில் சில ஆண்டுகள் தங்கியிருந்த ராஜேஷ் மீது வந்த போட்டி பொறாமை காரணமாக அவரை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

Related News

2368

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery