காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பும் என்பதால், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு போராட்டக்காரகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இடையிலான ஐபில் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ஐபில் நிர்வாகம் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து, கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் அருகே போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு கட்சியின் கூறி வந்த நிலையில், பிற்பகல் இரண்டு மணி முதல் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வா.கெளதமன், நடிகர் கருணாஸ், வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து போலீசார் பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் உள்ளிட்ட போராட்டகாரர்களை கைது செய்தனர்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...