‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சந்திரன், நடிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வெளியாக உள்ளது. மேலும் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்து வரும் இவர், தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், தன்னிடம் பேட்டி எடுக்க வரும் நிருபர்களிடம், “தயவு செய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க” என்று சந்திரன் கண்டிஷன் போடுகிறாராம். அடடா...சந்திரனின் இந்த கண்டிஷனுக்கு பின்னாடி எதாவது பிரச்சினை இருக்குமோ, என்று பலர் நினைக்க, அவர் அப்படி சொல்வதற்கு காரணம், அவரை பேட்டி எடுக்க வருபவர்கள் அனைவரும் அஞ்சனாவுடனான அவரது காதல் கதையை கேட்பது தானாம். புதுசாக இருந்தால் பரவாயில்லை. கடந்த இரண்டு வருடங்களாக இதையே சொல்லி...சொல்லி....சந்திரன் ரொம்பவே சோர்ந்து போய்ட்டாராம்.
அதனால், தற்போது தன்னை பேட்டி எடுக்க வருபவர்களிடம், முதலில் அவர் சொல்லும் வார்த்தை, ”தயவு செய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க” என்பது தானாம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...