Latest News :

தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னடர்கள் - நன்றி தெரிவித்த சிம்பு!
Thursday April-12 2018

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது காவலர் ஒருவரை சிலர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காத சிம்பு, அதற்கான விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தை வைத்து பலர் அரசியல் செய்கிறார்கள். இதனை உணர்ந்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு 11 ஆம் தேதி ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ இணையத்தில் பதிவிட வேண்டும், என்று தெரிவித்தார்.

 

சிம்புவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த கன்னட மக்கள் பலர் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவையும், புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களது இத்தகைய நடவடிக்கைக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னட அரசியல்வாதிகளும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.

 

Related News

2378

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery