Latest News :

தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னடர்கள் - நன்றி தெரிவித்த சிம்பு!
Thursday April-12 2018

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது காவலர் ஒருவரை சிலர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காத சிம்பு, அதற்கான விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தை வைத்து பலர் அரசியல் செய்கிறார்கள். இதனை உணர்ந்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு 11 ஆம் தேதி ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ இணையத்தில் பதிவிட வேண்டும், என்று தெரிவித்தார்.

 

சிம்புவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த கன்னட மக்கள் பலர் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவையும், புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களது இத்தகைய நடவடிக்கைக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னட அரசியல்வாதிகளும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.

 

Related News

2378

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery