Latest News :

தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்க வில்லை - கார்த்தி விளக்கம்!
Friday April-13 2018

சமீபத்தில் வெளியான ‘நீடி நாடி ஓகே கதா’ என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் ரவி உடுகுலா கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும், அப்படம் தமிழ் மற்றும் தெல்கு என இரு மொழிகளில் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாயின.

 

ஆனால், கார்த்தி தரப்பு இதை மறுத்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, தனது அடுத்தப் படத்தை சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்தவுடன் தொடங்க இருக்கிறாராம்.

 

இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை ‘கார்த்தி 17’ என்று அழைக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.

Related News

2388

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery