சமீபத்தில் வெளியான ‘நீடி நாடி ஓகே கதா’ என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் ரவி உடுகுலா கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும், அப்படம் தமிழ் மற்றும் தெல்கு என இரு மொழிகளில் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாயின.
ஆனால், கார்த்தி தரப்பு இதை மறுத்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, தனது அடுத்தப் படத்தை சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்தவுடன் தொடங்க இருக்கிறாராம்.
இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை ‘கார்த்தி 17’ என்று அழைக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...