சமீபத்தில் வெளியான ‘நீடி நாடி ஓகே கதா’ என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் ரவி உடுகுலா கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும், அப்படம் தமிழ் மற்றும் தெல்கு என இரு மொழிகளில் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாயின.
ஆனால், கார்த்தி தரப்பு இதை மறுத்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, தனது அடுத்தப் படத்தை சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்தவுடன் தொடங்க இருக்கிறாராம்.
இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை ‘கார்த்தி 17’ என்று அழைக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...