Latest News :

60 ஆண்டுகளுக்குப் பிறகும் வசூலில் சாதனை படைத்த ‘நாடோடி மன்னன்!
Sunday April-15 2018

சினிமாவிலும், அரசியலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர்-ன் நடிப்பில் கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடி மன்னன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, அந்த காலகட்டத்தில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாகவும் திகழ்ந்தது.

 

எம்.ஜி.ஆர்-ன் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் எழுத, சி.கருப்பசாமி, கே.ஸ்ரீனிவாசன், ப.நீலகண்டன் ஆகியோர் திரைக்கதை எழுதினார்கள்.

 

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி, எம்.என்.ராஜாம் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூ.1.80 கோடி பட்ஜெட்டில் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரால் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது.

 

எம்.ஜி.ஆர்-க்கு ரூ.11 கோடி வசூலைக் குவித்த இப்படம் தான் அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி பல பெருமைகளைக் கொண்ட இப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்பட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்ப்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் அமோக ஆதரவோடு 25 நாட்களை கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. 

 

இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில், சமீபத்தில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டும் இன்றி ஏராளமான இளைஞர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

Related News

2396

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery