Latest News :

கமல் அப்படி கூறியது ஏன்? - கேள்வி கேட்கும் நடிகை கஸ்தூரி
Thursday August-17 2017

அரசியல், சினிமா என்று அனைத்து விஷயங்கள் குறித்து தினமும் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, தமிழக அரசை விமர்சித்து கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில், ”கமல் கூறுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய திட்டங்கள் இருக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு பெரிய திட்டங்கள் இருந்தால் அதை அவர் தெளிவாக கூற வேண்டும் என்று நான் நேரடியாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

 

மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு பின்னால் 4 பேர் செல்கின்றனர். நம் நாட்டில் போலி சாமியாருக் குக்கூட வரவேற்பு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேருக்கு பின்னால் 4 பேர் செல்வதில் என்ன தவறு உள்ளது.

 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான “ஸ்டிங்” ஆபரே‌ஷனை தொடர்ந்தும், குட்கா ஊழலைத் தொடர்ந்தும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தினமும் கேட்டுக் கொண்டு உள்ளன. இந்நிலையில் கமல் தனது டுவிட்டரில் ஏன் அப்படி கூறினார்?”, என்று தெரிவித்துள்ளார்.

Related News

240

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery