150 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து, ரஜினி, கமல் உள்ளிட்ட எந்த ஒரு நடிகரும் செய்திராத சாதனையை சினிமாத் துறையில் செய்திருக்கும் விஜயகாந்த், அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் பாராட்டு விழாவில், அவர் மீண்டும் நடிக்க வருவார், என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது, விஜயகாந்தின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற விழாவில் திரைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி பேசியதோடு, அவருடன் பழகிய நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டனர். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கூறியதோடு, “நானும் நீங்களும் அடுத்த வருடன் சேர்ந்து ஒரு படம் பண்றோம். இவர் தான் தயாரிப்பாளர்” என்று கூறி தயாரிப்பாளர் தாணுவை காட்டினார். அதே போல், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
பிறகு பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, “கலைத்துறை சீரழிந்துகொண்டிருப்பதை இங்கு பேசிய எல்லோரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கேப்டனை வாழவைத்த கலைத்துறையை அழியவிடமாட்டார். கேப்டன் பழையபடி மீண்டும் நடிக்க வருவார்.” என்று தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...